உலக நாடுகளை கடுமையாக நிலைகுலைய வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தனது தாக்கத்தை இந்தியாவிலும் விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 2069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. எனவே இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இதன் படி கொரோனா தொற்றுக்கான அறிகுறி யாருக்காவது இருந்தால் அவர்களை 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் சிறைச் சாலையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த அஜய் பாபு என்ற கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருந்ததற்கான சந்தேகத்தின் பேரில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த கைதி தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட அறையின் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்து கேரள காவல்துறையினர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கைதி அஜய்பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…