மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு…

Published by
Kaliraj

உலகம் முழுதும் பல ஆயிரம் மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம்  நம் நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்’ என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சமீபத்தில் அறிவித்தது.  இதையடுத்து, நம் நாட்டில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, அந்த மருந்தினை   வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு  தற்போது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது,  கொரோனா வைரஸ்  தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவர்களின்  பரிந்துரைப்படி, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. எனவே, இந்த மருந்தை தவறாக பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், இந்திய மருந்து மற்றும் ஒப்பனை பொருள் சட்டத்தின் படி மத்திய அரசால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  அதன்படி, ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து உள்ள எந்த வகையான மருந்துப் பொருட்களையும் சில்லரை விற்பனை  செய்யக் கூடாது என  கூறப்பட்டுள்ளது

Published by
Kaliraj

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

54 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago