இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் வட்டம் போட்டு காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சமுக இடைவெளியை அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அவர்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆய்வு செய்தார். அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் செங்கல் கல்லை எடுத்து வட்டமிட்டார். பொதுமக்களின் நலனுக்காக சாலையில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பொதுமக்கள் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றனர்
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…