இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் வட்டம் போட்டு காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சமுக இடைவெளியை அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அவர்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆய்வு செய்தார். அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் செங்கல் கல்லை எடுத்து வட்டமிட்டார். பொதுமக்களின் நலனுக்காக சாலையில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பொதுமக்கள் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றனர்
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…