இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்குகிறது-புதுச்சேரி அரசு

Published by
kavitha

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல்  அவரவர் வங்கி கணக்கில் ரூ.2000  செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று  நடைபெற்றது.இதில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி, ஏப்ரல் – ஜூன் வரையிலான 3 மாத செலவினங்களுக்காக ரூ.2042 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து இடைக்கால பட்ஜெட்டாக பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.பின்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ரூ.995 கோடி நிதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்த அவர் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே புதுச்சேரி மக்களுக்கு அரசு உதவும் நோக்கில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் இன்று முதல் ரூ.2,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

41 minutes ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

2 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

3 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

3 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

4 hours ago

முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…

4 hours ago