1000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.! விரைவில் அறிமுகம்…

Published by
மணிகண்டன்

1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும். என புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

 கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.

இந்த தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர்  ஆதார் பூனவல்லா கூறுகையில், ‘ மே மாத இறுதிக்குள் தடுப்பூசி உற்பத்தி தொடங்கி விடும். இந்த வருடம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதமே ஒரு சிறந்த தயாரிப்பு எங்களிடம் கிடைக்கும்.

தடுப்பூசி உற்பத்தி பணியில்  கோடஜெனிக்ஸ் மற்றும் பிற அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம். அண்மையில் ஒரு வாரத்திற்கு முன்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன்  இணைந்து அதன் பின்னர் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனது நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் 1000 ரூபாய் விலையில் மருத்துவ சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். விரைவில் துல்லியமான புள்ளிவிவரம் வெளியாகும்.’ என குறிப்பிட்டுள்ளார்.
Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago