சீனாவை தொடர்ந்து … மும்பை வந்த 2 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ..?

Published by
murugan
  • சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
  • இன்று சீனாவில் இருந்து  வந்த பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.

சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்துதான் தோன்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்  தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.

இதைத்தொடர்ந்து வூஹான் நகரில் இந்தியாவில் இருந்து மருத்துவம் மற்றும் பிறபடிப்புகளை படிக்கும் 700 மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்தியாவில் “கொரனா வைரஸ்” பரவாமல் இருக்க அனைத்து சர்வதேச நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம்  மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இன்று பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும்  மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தனி வார்டு அமைத்து  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில்  “கொரனா வைரஸ்” தாக்கி 25 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

7 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

9 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

10 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

11 hours ago