இருவேறு இந்தியாவை உருவாக்கி விட்டது கொரோனா-கபில் சிபில் கடும் விமர்சனம்

Default Image

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு, இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளது என்று கபில் சிபில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து  தனது ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; டிவியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது. மற்றொரு இந்தியாவோ, வீட்டுக்கு செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி என தன் வாழ்வுக்காக போராடுகிறது. இந்நிலையில் கபிலின் இந்த விமர்சனமானது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி யோகா செய்ததையும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர் டிவியில் ராமாயணம் பார்த்ததையும், ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பாட்டுப்போட்டி நடத்தியதையே சிபில் மறைமுகமாக விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்