தடுப்பு போருக்கு தயார்…12 படை பிரிவுகளும் களமிரங்கும்..எஸ்.என்.பிரதான் அதிரடி

Published by
kavitha

பேரிடர் காலக்கட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிவிரைவாக ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையானது செயல்பட்டு வருகிறது.இப்படைகளில் 12 படைப்பிரிவுகள் என மொத்தம் 13 ஆயிரத்து 800 அதிரடி வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

தாய்நாட்டை தற்போது உலுக்கி எடுத்தும் கொலைக்காரக்கொடூரன் கொரோனாவால் நாடு தனிமைப்படுத்தப்படுத்தி நிற்கிறது.தனிமை படுத்தி கொள்வதன் மூலமே இதனை வீரியத்தை குறைக்க முடியும் மேலும் இதன் பாதிப்பு அசுர வேகத்தில் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகிறது.மேலும் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துவருகிறது.144 தடையை மதியுங்கள் மாறாக மிதிக்காதீர்கள்.இவ்வாறு நாடே கொரோனாவால் கடும் சவாலை சந்தித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு தொடர்பான அவசரகால பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில்  இருப்பதாக  தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குனர் எஸ்.என்.பிரதான் கூறுகையில்:கொரோனாவுக்காக மாநில அரசுகள் உருவாக்கிய மாநில கட்டுப்பாட்டு அறைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையானது முகாமிட்டு உள்ளது. அங்கு தேவைப்படும்போது களத்திற்கு எங்களை அழைக்குமாறு அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம். எங்களை மாநில அரசுகள் அழைக்கும்போது, ஒரு போருக்கு  எப்படி செல்வோமோ அதனைப்போல் தயாராக உள்ளோம்.தற்போது, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்  தடுப்பிற்காக எங்களை அழைத்து உள்ளன. ஒரு படைப்பிரிவுக்கு 84 அதிரடி வீரர்கள் வீதம் சிறிய குழுக்களை அங்கு அமைத்து உள்ளோம். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்த இதர படைகளை சேர்ந்த 28 ,000 ஆயிரம் பேருக்கு தற்போது இது குறித்த பயிற்சி யை தெளிவாக அளித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.போருக்கு நாங்கள் தயார் என்று நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் ஆபத்து அதன் கோர முகத்தை காட்டும் பொழுது அதனை எதிர்த்து மக்களை ஆபத்தின் தாக்கத்தில் இருந்து காக்க தங்கள் இன்னுயிரை துச்சமென்று நெஞ்சை நிமிர்த்து காத்து வருகின்றனர் நம் இந்திய காவல்தெய்வங்கள்.

Recent Posts

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

20 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

22 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago