கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி உலக மக்களை கடும் அச்சுறுத்தி தனது கோரத்தொற்றால் உயிர்களை காவு வாங்கி வரும் கொலைக்காரக்கொரோனாவிற்கு உலகளவில் செத்து வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறம் கொரோனா வைரஸ் கொடூரம் என்றால் மறுபுறம் பொருளாதார பேரிழப்பு இரண்டையும் சமாளிக்க உலக நாடுகள் விழிபிதுங்கி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.வல்லரசு என்று மார்த்தட்டி கொண்ட அமெரிக்கா வைரஸ் பாதிப்பில் இத்தாலியை விட அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.இவ்வாறு இருக்க கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்களை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவியாக அறிவித்தது அமெரிக்கா.தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 64நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளது.இதில் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தொகையானது ஆய்வக வசதி,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும்,தொழிட்நுட்ப உதவி போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இது குறித்து தெரித்த அமெரிக்க சுகாதாரத்துறை இந்தியாவிற்கு அமெரிக்கா 2.8 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக நிதியுதவியினை செய்து வருகிறது.இதில் சுகாதாரத்துறை தொடர்பாக மட்டும் 1.4 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…