Coronavirus India: 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய உச்சம் 28,000-பேருக்கு கொரோனா.!

Published by
கெளதம்

24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் 8,49,553 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,849,435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,67,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,34,621 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருகிறது அந்த வகையில் தமிழ்நாடு,கேரளா,டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.

கேரளா:-

கேரளாவில் நேற்று  ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டெல்லி:-

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,921 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,குணமடைந்தோரின் விகிதம் 79.05 சதவீதமாக அதிகரித்தது. மேலும், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,334 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா:-

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக,நேற்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தமிழ்நாடு:-

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,591  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார்.…

23 minutes ago

ஒரு வருஷம் கொடுங்க..அர்ஜுனை சிறந்த பேட்ஸ்மேனா மாத்துவேன்..யோகராஜ் சிங் வேண்டுகோள்!

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட்…

1 hour ago

43 வயதாகினாலும் வேகம் குறையல… தோனியின் டாப் 4 மின்னல் வேக சூப்பர் ஸ்டம்பிங்!

சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார்…

1 hour ago

அந்த விஷயத்துல ராஷ்மிகாவுக்கே பிரச்சனை இல்லை..உங்களுக்கு என்ன? சல்மான் கான் ஆவேசம்!

சென்னை : நடிகர் சல்மான் கான் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.…

2 hours ago

சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்… கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு…

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. போட்டியின் போது…

2 hours ago

“இந்த ரன்கள் அவருக்கு போதாது”.., விராட் கோலி குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

சென்னை : நேற்று தினம் (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில்…

3 hours ago