Coronavirus India: 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய உச்சம் 28,000-பேருக்கு கொரோனா.!

Published by
கெளதம்

24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானது.

இந்தியாவில் 8,49,553 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 12,849,435 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,67,783 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால், 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5,34,621 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருகிறது அந்த வகையில் தமிழ்நாடு,கேரளா,டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும்.

கேரளா:-

கேரளாவில் நேற்று  ஒரே நாளில் 488 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,439 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,963 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

டெல்லி:-

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,10,921 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,998 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,குணமடைந்தோரின் விகிதம் 79.05 சதவீதமாக அதிகரித்தது. மேலும், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,334 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா:-

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அங்கு இதுவரை இல்லாத அளவாக,நேற்று ஒரே நாளில் 8,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,46,600 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தமிழ்நாடு:-

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 3,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,591  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

27 minutes ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

37 minutes ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

1 hour ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

2 hours ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

3 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

4 hours ago