இந்தியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு , இறப்பு எண்ணிக்கை 25,000 ஆக உயர்வு

Published by
Castro Murugan

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10 லட்சத்தை கடந்துள்ளது .

உலக அளவில், இதுவரை 13,826,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  589,481 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் நாளுக்குநாள் வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  1,002,851 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25,543 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 613,735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள  நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ்  32,682 பாதிக்கப்பட்டுள்ளனர்  இதில்  614 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 பாதிக்கப்பட்டதில் பதிவான மூன்றாவது நாடாகவும், 25,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்த எட்டாவது நாடாகவும் இந்தியா உள்ளது.

மாநிலங்களின் நிலவரம் :

மகாராஷ்டிராவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது, இது புனேவில் தினமும் 8000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்து வருகிறது. தமிழ்நாடு தினசரி சுமார் 4,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி  வருகிறது, அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முறையே 3000 மற்றும் 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும் தினசரி 1,600 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு  வருவதாகவும், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் தினமும் 1,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது .

இதற்கு முன்னர் தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்திய கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் கடந்த மாதம் ‘ஊரடங்கை தளர்த்துதல் ‘ கட்டம் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஒரு நாளைக்கு 10 லட்சம் :

எவ்வாறாயினும், கோவிட் -19 இன் மொத்த பாதிக்கப்பட்டவர்களில்  மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தீவிர மருத்துவ மேற்பார்வையில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் ஏற்கனவே குணமடைந்து சென்றுவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி மாதம் முதன்முதலில் பதிவாகியதிலிருந்து இந்தியா சோதனை திறன்களை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாங்கள் ” ஒவ்வொரு நாளும் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து வருகிறோம்,”  வரும் 12 வாரங்களில் ஒரு நாளைக்கு 10 லட்சம் மாதிரிகளை சோதிக்க திட்டமிடப்பட்டுள்தாகவும் தெரிவித்தார் .

Published by
Castro Murugan
Tags: coronavirus

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

33 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago