இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆகவும் உயர்ந்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன் விளைவு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,80,630 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,79,069 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,05,315 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,19,321 பேர் பாதிக்கப்பட்டு, 45,355 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வந்த நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,471 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 3,960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 5221, குஜராத்தில் 2272, டெல்லியில் 2156, ராஜஸ்தானில் 1801, தமிழ்நாட்டில் 1,629, மத்திய பிரதேசத்தில் 1592, உத்தரபிரதேசத்தில் 1412 பேர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…