கேரளாவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா.! மேலும் 39 பேருக்கு கொரோனா உறுதி .!

Default Image

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸால் 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும்  17 உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையெடுத்து இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 137 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சற்று மணி நேரத்திற்கு முன் கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது , கேரளா மாநிலத்தில் புதியதாக 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 13 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 164 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்