மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வீரியம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதுவரை 138,536 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,024 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனாவால் 7,113 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57,692 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 76,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டிலேயே மஹாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம். மும்பை, புனே போன்ற முக்கிய நகரங்களை கொண்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து தற்போது 50 ஆயிரத்தை தண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…