கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,041,106 ஆகவும் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,203 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து 222,332 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 இருந்த நிலையில் தற்போது மேலும் 246 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 163 பேர் எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 62 எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும் , இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில் 335 பேரும் , தமிழ்நாட்டில் 309 பேரும் , கேரளாவில் 286 , டெல்லியில் 219 , கர்நாடகாவில் 124 , ராஜஸ்தானில் 167பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…