இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு?

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புள்ளாகியதுடன், 300க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 627,168 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 18,225 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 21,948 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 377 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 379,902 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 229,041 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் குறைய வேண்டுமானால், நாம் வீட்டில் இருப்போம், தனித்து இருப்போம், விழித்திருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament