கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 35,043 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,152 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35,365 பேரில் 9,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுவும், கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 549 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவில் இதுவரை 10,498 பேர் பாதிக்கப்பட்டு, 459 பேர் பலியாகியுள்ளனர். இதுதான் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம். இதையடுத்து குஜராத்தில் 4395 பேர் பாதிக்கப்பட்டு, 214 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 3515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 2719, ராஜஸ்தானில் 2584, தமிழ்நாட்டில் 2323, உத்தரபிரதேசத்தில் 2281 என அதிகபட்சமாக இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…