நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 லிருந்து 42,836 ஆக உயர்ந்துள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக வல்லரசு நாடுகளே திணறி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு தடுப்பு மறுத்து கண்டுபிடிப்பது தான் என்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ஒரு ஆண்டு எடுத்துக்கொள்ளும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலகளவில் இதுவரை 35,85,051 பேர் பாதிக்கப்பட்டு, 2,48,655 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே 11,61,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பொதுமுடக்கமும் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 லிருந்து 42,836 ஆக உயர்ந்துள்ளது. அதுபோன்று பலி எண்ணிக்கை 1,373 லிருந்து 1,389 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டு, 548 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 2,115 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…