டெல்லியில் ஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா.. 63 பேர் உயிரிழப்பு!

Default Image

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 3,000 பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்தது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 59,746 ஆக உயர்ந்துள்ளது. அதில் 24,558 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்தார்.

மேலும், அங்கு ஒரே நாளில் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,013 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,175 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்