எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது – வதந்தியை நம்பியவர் உயிரிழப்பு!

Published by
Rebekal

எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி ஊற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் இல்லாமலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து வருகின்றனர். எனவே கொரோனா வராமல் தடுப்பதே வழி என மக்கள் தற்பொழுதும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல இயற்கை வைத்தியங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி விடுவதால் பலர் அதை உண்மை என்று நம்பி விடுகின்றனர். இதுபோல மூக்கில் எலுமிச்சை சாற்றை விட்டால் கொரோனா வராது எனவும் அது ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் எனவும் கர்நாடக முன்னாள் எம்பி விஜய் சங்கேஸ்வரர் அவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். இதனை நம்பி 45 வயதுடைய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் பசவராஜ் என்பவர் தனது மூக்கில் எலுமிச்சை சாற்றை விட்டு உள்ளார். அதன் பின் பசவராஜ் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இறுதியில் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை நம்பி சமூக வலைதளங்களில் பரவக்கூடிய போலியான கருத்துக்களை நம்பி மக்கள் எதையும் வீட்டில் செய்து பார்க்க வேண்டாம் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

23 minutes ago

பரபரக்கும் அரசியல் களம்! அதிமுக – பாஜக கூட்டணி? அண்ணாமலை பதவிக்கு ஆபத்து?

சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…

50 minutes ago

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

3 hours ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

3 hours ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

4 hours ago