உஷார்!கொடூரன் குறித்து வாட்ஸ்அப்..பேஸ்புக்கில் வதந்திகளை பரப்பினால் 1 ஆண்டு சிறை..அபராதம்!

Published by
kavitha

கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவோர்களை கைது செய்வதுடன் ஓர் ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி இந்த வைரஸ்க்கு 2 பேர் பலியாலியுள்ளனர்.107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்திற்கும்  தெலுங்கானா அரசு மார்ச் 31ந்தேதி தேதிவரை தடை விதித்ததுள்ளது.இதே போல் தமிழ்நாடு,கர்நாடாகம்,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இந்நிலையில் ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் எச்சரிக்கையை விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா வைரஸ்  பரவுவதைத் தடுக்க தெலுங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால், சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களையும், வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை பீதியையும் , அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறு கொரோனா குறித்த தவறான வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்  போன்ற சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓர் ஆண்டு கால சிறையும், அபராதமும் விதிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் கொரோனா குறித்த தவறான தகவல்கள், எச்சரிக்கைகள், அதன் பாதிப்புகள், அதன் பரவல் குறித்து வதந்திகளைப் பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 58ன்படி கைது செய்யப்படுவார்கள் என்ற  கூடுதல் தகவலையும்  தெரிவித்தார்.இதற்கிடையில் அம்மாநில முதல்வர்  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விடுத்த அறிவிப்பில், ” ஊடகங்கள் கொரோனா குறித்த உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு தகவலையும்  உடனடியாக ஏதும் செய்திகள் வெளியிட வேண்டாம் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவிக்கும் செய்திகள் மட்டும் செய்தி வெளியிட்டால் போதுமானது. தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

3 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago