கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிகுர் ரஹ்மான் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழி சர்வவல்லவரிடம் மன்னிப்பு கோருவது தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், பக்ரீத் தினத்தன்று, சந்தைகளை திறக்க வேண்டும். இதனால் மக்கள் விலங்குகளை அங்கிருந்து வாங்க முடியும். கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பிரார்த்தனை செய்ய மசூதிகள் மற்றும் ஈட்காக்கள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று மீண்டும் வலியுறுத்தினார். மசூதியில் பிரார்த்தனை செய்ய நிர்வாகம் அனுமதித்தால், எல்லோரும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், பிரார்த்தனை செய்யும் போது முககவசம் அணிவதையும் உறுதி செய்வோம். அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் எங்கள் வீடுகளிலிருந்து ஒரு பிரார்த்தனை செய்வோம். மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…