கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல! நம்முடைய பாவங்களுக்காக கடவுள் கொடுத்த தண்டனை! – சமாஜ்வாதி கட்சி எம்.பி

Published by
லீனா

கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிகுர் ரஹ்மான் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழி சர்வவல்லவரிடம் மன்னிப்பு கோருவது தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், பக்ரீத் தினத்தன்று, சந்தைகளை திறக்க வேண்டும். இதனால் மக்கள் விலங்குகளை அங்கிருந்து வாங்க முடியும். கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பிரார்த்தனை செய்ய மசூதிகள் மற்றும் ஈட்காக்கள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று மீண்டும் வலியுறுத்தினார். மசூதியில் பிரார்த்தனை செய்ய நிர்வாகம் அனுமதித்தால், எல்லோரும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், பிரார்த்தனை செய்யும் போது முககவசம் அணிவதையும் உறுதி செய்வோம். அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் எங்கள் வீடுகளிலிருந்து ஒரு பிரார்த்தனை செய்வோம். மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago