உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 24 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பலவேறு நாடுகளில் மக்கள் வீதியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவை சேர்ந்த சமையல் கலை வல்லுநர் கார்டோஸ் என்பவர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மும்பையில் சொந்தமாக ஹோட்டல் ஒன்று உள்ளது. இவர் இந்த மாதம் 8 ஆம் தேதி மும்பை வந்து சென்றுள்ளார். அடுத்து 18ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனால், கடந்த 8ஆம் தேதி இவர் மும்பை வந்திறங்கி சந்தித்த நபர்களுக்கு இவர் இறந்த செய்தியை அவரது மும்பை ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கார்டோஸை சந்தித்த நபர்கள் மருத்துவ பரிசோதனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இவருக்கு மனைவி, மற்றும் 2 மகன்கள் உள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…