சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 3,200 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவை சார்ந்த 3 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வீடு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் , தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.
தற்போது இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 28 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள பயோமெட்ரிக் வருகை முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு உத்தரவு பிறப்பித்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…