“2021 ஜூலைக்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்” – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Published by
Surya

அடுத்தாண்டு ஜூலைக்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதனை கட்டுக்குள் கொண்டுவர 5 ஆம் கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. ஆயினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பாக இன்று அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது உரையாற்றிய அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை உலகிலே இந்தியாவில் தான் அதிகம் எனவும், உயிரிழந்தோரின் சதவீதம் இந்தியாவில் தான் குறைவு என்று கூறினார்.

மேலும் உரையாற்றிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவது 3 நாட்களிலிருந்து 75 நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி அடுத்தாண்டு விநியோகத்திற்கு வரும் எனவும், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசர் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசர் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

12 minutes ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

44 minutes ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

1 hour ago

CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…

2 hours ago

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

3 hours ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

3 hours ago