15 நிமிடத்தில் மூன்று முறை கொரோனா தடுப்பூசி – தானே பெண்மணி!

Default Image

தனக்கு 15 நிமிட இடைவெளியில் 3 முறை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக தானேவை சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் பலரும் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பொழுது சில குளறுபடிகள் ஏற்பட்டு விடுகிறது. சிலர் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மாறி மாறி எடுத்து கொள்கின்றனர், மேலும் சிலர் சில குறிப்பிட்ட கால இடைவெளி இல்லாமலேயே அடுத்தடுத்த தடுப்பூசிகள் எடுத்துக் கொள்கின்றனர்.

அது போல தானேயில் உள்ள ஒரு பெண்மணி பத்து முதல் பதினைந்து நிமிட இடைவெளியில் 3 முறை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக  கூறியுள்ளார். இந்நிலையில் தனக்கு மூன்று முறை இந்த பெண்மணி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று கூறியதுடன் அந்த பெண்ணின் கையில் தடுப்பூசி மூலமாக ஏற்பட்ட காயங்கள் மூன்று இருப்பதாகவும் தானே மேயர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்