கொரோனா தடுப்பூசி தொற்றின் வீரியத்தை குறைகிறது – மத்திய அரசு

Default Image

கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்று மத்திய அரசு தகவல்.

இதுகுறித்து பேசிய மத்திய அரசு, கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல, தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, உயிரிழப்பை 98.99% தடுப்பதில் பலனளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத சில இடங்களில் பாதிப்பு அதிகரிப்பதை காண முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்