மே 1 முதல் இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. முழு பட்டியல் இதோ!

Published by
Surya

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. அதனைதொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது. இதனால் கருத்தில் கொண்ட மாநில அரசுகள், தடுப்பூசிகளை போடும் பணிகளை தீவிரமாகியுள்ளது. இதில் சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷில்ட் தடுப்பூசி, 400 முதல் 600 ருபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சில மாநிங்களில் மே 1 முதல் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி இலவசமாக போடும் மாநிலங்கள்:

தமிழ்நாடு: தமிழகத்தில் 18-45 வயதுள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

கேரளா: கேரளாவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

தெலுங்கானா: அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஹரியானா: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

மத்திய பிரதேசம்: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

ஜம்மு-காஷ்மீர்: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

ஹிமாச்சல் பிரதேஷ்: 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

கோவா: 18-45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.

சத்தீஸ்கர்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

பீகார்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

உத்தரபிரதேசம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

அசாம்: அசாம் மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் 18 வயதிற்கு மேல் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், மே 5 முதல் இலவச தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

57 minutes ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

2 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

5 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago