இன்னும் 73 நாட்களில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்து உபயோகபடுத்த ஆரம்பித்து விட்டோம் என்ற நற்செய்தியும் அண்மையில் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்துள்ள கோவில்ஷீட் எனும் தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீராம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி இது குறித்து பேசுகையில், அரசால் சிறப்பு தயாரிப்பு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவாக இன்னும் 58 நாட்கள் பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு 73 ஆவது நாட்களுக்கு பிறகு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார். மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த பரிசோதனைகள் அதிக அளவில் மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடப்பதாக தெரிகிறது. தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு விடப்பட்ட உடன் அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…