மஹாராஷ்டிராவில் தற்பொழுது முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக அனைத்து சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்களுக்கும் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட அளவில் தடுப்பூசிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவுக்கு இதுவரை 1.7 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட தடுப்பூசிகளை இதுவரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் முதல்கட்டமாக எடுத்து கொண்டுள்ளாராம். குறைவாக இருப்பதால் ஆறு மையங்களில் மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக மஹாராஷ்டிராவுக்கு வழங்கப்பட உள்ள தடுப்பூசிகள் வந்து சேர்ந்த பின் மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்குமாறு செய்யப்படும் என மாநில நோய்த்தடுப்பு அதிகாரி திலீப் பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…