ஆந்திர மாநிலத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கொரோனா மூன்றாம் அலை விரைவில் ஏற்பட உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாகப் கடைபிடிக்க வேண்டும் எனவும், தடுப்பூசிகள் போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் தற்போது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரான மருத்துவர் கீதா பிரசாதினி அவர்கள் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும், நேற்றுவரை 5.5 லட்சம் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 4.5 தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை விரைவில் நடைமுறைப்படுத்த அதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…