குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது மூன்றாவது அலை பரவக் கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமல்லாது, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…