இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்!

Published by
Rebekal

இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்  பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா மூன்றாம் அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கூறியுள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள், கொரோனாவுக்கு எதிராக நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது பெருமைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும், தொடக்கத்தில் தினமும் 2.5 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தினசரி 40 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதால் மூலம் தடுப்பூசி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் செயல்திறன், நோய் எதிர்ப்பு பொருள் உருவாக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் .மேலும் விரைவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது எனவும் அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

42 minutes ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

2 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

3 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

15 hours ago

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…

17 hours ago