இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர்!

Published by
Rebekal

இந்தியாவில் விரைவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்  பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே கொரோனா மூன்றாம் அலையில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கூறியுள்ள மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள், கொரோனாவுக்கு எதிராக நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது பெருமைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும், தொடக்கத்தில் தினமும் 2.5 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தினசரி 40 லட்சம் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதால் மூலம் தடுப்பூசி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் செயல்திறன், நோய் எதிர்ப்பு பொருள் உருவாக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் .மேலும் விரைவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது எனவும் அமைச்சர் பாரதி பிரவீன் பவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!

டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

5 minutes ago
பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago
“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

10 hours ago
அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

12 hours ago