குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனாவின் இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவும் வீதம் சற்று குறைந்துள்ளது இருந்தபோதிலும் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசிகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவும் கூறி வருகின்றனர்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் 12 முதல் 18 வயதிற்குரிய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தெரிவித்திருந்தது.
தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளதாவது, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் சைடஸ் கேடில்லா நிறுவனத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது. இது ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரசிகர்களுக்கு செல்ஃபி பாயிண்ட்… தோனியின் வீட்டில் ‘7’ ஜெர்சி எண், ஹெலிகாப்டர் ஷாட் லோகோ.!
February 8, 2025![MS Dhoni HOUSE](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/MS-Dhoni-HOUSE.webp)
ஈரோடு கிழக்கு : திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.., 10 ஆயிரத்தை நெருங்கும் வித்தியாசம்!
February 8, 2025![Erode By Election Result](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Erode-By-Election-Result.webp)
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: பாஜக தொடர் முன்னிலை.!
February 8, 2025![Delhi Election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Delhi-Election-2025.webp)
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)