புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…!

Default Image

புதுச்சேரியில் இன்று முதல் 18 வயதுக்கு கொரோனா தடுப்பூசி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்த இணையத்தில் முன்பதிவு செய்யும் பணிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இன்று ஏழு இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என தமிழிசை அவர்கள் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்றுமுதல், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, கோரிமேடு மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவமனை, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை, காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்