உயிரிழந்த பிரேதத்திற்கு கொரோனா சிகிச்சை – மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமணா பட பாணியில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த மாதம் ஏப்ரலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50,000 கட்டணத்தை முன்பணமாக குடும்பத்தினர் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி அவருக்கு மிகவும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே, அவரது மருத்துவ செலவிற்காக 35 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நோயாளியின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த பணத்தை செலுத்திய பின்னர் மூன்று நாள் கழித்து மீண்டும் கட்டணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்துள்ளனர். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் நோயாளி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சான்று அளித்துள்ளது. ஆனால், கடந்த 21ம் தேதியே நோயாளி உயிரிழந்துவிட்டதாக இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த நோயாளியின் குடும்பத்தினர் பணம் பறிப்பதற்காக உயிரிழந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து சிவாஜி நகர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. எனவே, அந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது சிவாஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago