உயிரிழந்த பிரேதத்திற்கு கொரோனா சிகிச்சை – மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரமணா பட பாணியில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாந்தட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கடந்த மாதம் ஏப்ரலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50,000 கட்டணத்தை முன்பணமாக குடும்பத்தினர் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி அவருக்கு மிகவும் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே, அவரது மருத்துவ செலவிற்காக 35 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நோயாளியின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த பணத்தை செலுத்திய பின்னர் மூன்று நாள் கழித்து மீண்டும் கட்டணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்துள்ளனர். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் நோயாளி உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சான்று அளித்துள்ளது. ஆனால், கடந்த 21ம் தேதியே நோயாளி உயிரிழந்துவிட்டதாக இறப்பு சான்றிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்த நோயாளியின் குடும்பத்தினர் பணம் பறிப்பதற்காக உயிரிழந்த நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து சிவாஜி நகர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. எனவே, அந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது சிவாஜி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

4 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

5 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

6 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

8 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

9 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

9 hours ago