கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பத்திக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது.
இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கொரோனா பிரச்சினை குறித்து மோடி அரசுக்கு பலமுறை அறிவுறுத்தியுள்ளார். இப்போது கூட, அவர் தனது ட்விட்டர் மூலம் மீண்டும் ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அதில், கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த தொற்றுநோய்க்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாம் மூன்றாவது அலைகளையும் எதிர்கொள்வோம், இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…