டெல்லி DCP-க்கு கொரோனா.! 3 அதிகாரிகள் தனிமை.!

டெல்லி நேற்றுவரை 49979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21341 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1969 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார். அவரது அலுவலகம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரது ஊழியர்களில் மூன்று பேரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் டெல்லியில் இரண்டு ஐ.பி.எஸ்-ரேங்க் அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை, 800 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025