மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அரசு பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வந்தாலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனா பரவளின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மகராஷ்டிராவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அண்மையில் குறைந்து இருந்தாலும், தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகராஷ்டிராவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில், வாஷிம் எனும் மாவட்டத்தில் உள்ள பாவனா அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய மூன்று ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…