வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல இடங்களில் பரிசோதனை மையங்களும், தேவையான கட்டுபாட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுவார்களாம். பரிசோதனையில் நெகட்டிவாக இருந்தால் அவர்கள் கட்டாயமாக ஏழு நாட்கள் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் ஏழு நாட்கள் வீட்டிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
கர்ப்பிணி பெண்களும், 10வயதிற்குட்பட்டவர்களுடன் பயணம் செய்பவர்களும், குடும்பத்தில் யாராவது மரணமடைந்து செல்வதற்கு பயணம் செய்பவர்களும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலிருந்து நிபந்தனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பரிசோதனைக்கான முடிவுகள் வர குறைந்தது 8 மணி நேரமாகும் என்பதால் அனைத்து பயணிகளுக்கும் சிறப்பு காத்திருப்பு பகுதி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தான் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் யோசனையை முன் வைத்துள்ளதாகவும், அதற்கு இன்னும் சிவில் விமான அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…