இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொடர்பான அறிவிப்புகளை மத்திய சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே வழி என்று கூறிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்தது. ஆனால், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவிதது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்த உள்ளது. இந்த சோதனை மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…