இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொடர்பான அறிவிப்புகளை மத்திய சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே வழி என்று கூறிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்தது. ஆனால், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவிதது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்த உள்ளது. இந்த சோதனை மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…
சென்னை : தேசிய கல்வி கொள்கை 2020 பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மத்திய அமைச்சர்…