கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி மருந்து கொடுக்கலாம் .!

இந்தியாவில் கொரோனாவால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய ,மாநில அரசு கூறியுள்ளது.
சீனா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இதையெடுத்து ஜெய்ப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 இத்தாலி சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில் அவர்களுக்கு எச்.ஐ.வி.க்கான மருந்து வழங்கப்பட்டது. இதனால் இருவரும் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை , வயதை பொறுத்து எச்.ஐ.வி.,க்கு வழங்கப்படும். ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ ஆகிய மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, சீறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மருந்துகளை வழங்க கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025