#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

Default Image

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து இதன் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளிலும், மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை ஒத்தி வைக்குமாறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து, இலங்கையில், ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்