சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் – மத்திய அரசு எச்சரிக்கை!

Published by
Rebekal

சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாக தன் பரவிக்கொண்டிருக்கிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிராக  தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றி இருப்பதுமே முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்கான வழி என அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் பலர் அலட்சியமாக தான் தற்பொழுதும் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர்கள் லால் அகர்வால் அவரகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு கொரோனா நோயாளி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் செல்லும் பொழுது அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நோயாளி வெளியில் செல்வது 50% ஆவது குறைக்கும் பொழுது 30 நாட்களில் வெறும் 15 பேருக்கு தான் பரவும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதே நோயாளி 75% வெளியில் செல்வதை குறைத்து, பிறர் உடனான தொடர்பை குறைத்துக் கொள்ளும் பொழுது 30 நாட்களில் இரண்டு பேருக்கு தான் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார். அதுபோல மாஸ்க் அணிவதாலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கொரோனா உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தாலும் 10% தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆனால் அனைவருமே மாஸ்க் அணிந்து செல்லும் பொழுது கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

1 minute ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

42 minutes ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

1 hour ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

2 hours ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

4 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

4 hours ago