கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில தலைமை செயலருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் கேரளாவில் மிகவும் உச்சத்தில் இருப்பது கவலை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதாகவும், ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், கொரோணா பரிசோதனையை விரைவுபடுத்துவதுடன் தடுப்பூசி போடும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…