தலைநகரில் தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் 3000 பேருக்கு தொற்று உறுதி.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. இதுவரை அங்கு 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது. அதேபோல இன்று மட்டுமே 63 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 2175ஆக உயர்ந்தது.

இதில் சிறிய நற்செய்தி என்னவென்றால் 1719 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் 33,013  பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

10 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

51 minutes ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

2 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

3 hours ago

நள்ளிரவில் எல்லை மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…

3 hours ago