உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 70 வயது இந்து மூதாட்டியின் உடலை எடுத்து இஸ்லாமியர் நபர் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆதரவற்றவர்கள் தங்குமிடம் ஒன்றில் வசிக்கும் 70 வயதான சுனிதா தேவி, காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக ஏப்ரல் 5 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி அவசரநிலைக்கு வார்டுக்கு அழைத்து வரப்பட்டார்.பரிசோதனை செய்ததில் சுனிதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில்,தீவிர சிகிச்சை பெற்று வந்த சுனிதா சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் ஏப்ரல் 29 அன்று இறந்தார்.
இதனையடுத்து,கொரோனா வைரஸ் காரணமாக இறந்ததைத் தொடர்ந்து,உயிர் இழந்து ஆறு நாட்கள் ஆகியும் மூதாட்டியின் உடலை கேட்டு யாருமே முன்வராத காரணத்தினால் உள்ளூர் பத்திரிகையாளரான மெராஜுதீன் கான் மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பீரு உதவியுடன் மூதாட்டிக்கு இறுதிசடங்குகளை மெராஜுதீன் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்ததன் காரணமாக யாருமே அடக்கம் செய்யாமல் இருந்த ஒரு இந்து மூதாட்டியின் உடலை இஸ்லாமியர் நபர் ஒருவர் எடுத்து இறுதிச்சடங்கு செய்துள்ள சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…