‘கொரோனா பாசிடிவ்’ என வந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் நோய் தொற்றால் மட்டுமல்ல சிலர் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தற்கொலைக்கு நேராகவும் சிலர் செல்கின்றனர். அந்தவகையில் ஒடிசாவில் நடுத்தர வயது பெண் ஒருவர், தன் கணவருடன் நாயக்கர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அவரது கணவருக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வந்தது. ஆனால் அவரது மகன் ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மகனுக்கு தொற்று உறுதியான பின் கணவன் மனைவி இருவரும் சுகாதார மையத்தில் சோதனைக்காக தங்களது மாதிரிகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தது. ஆனால் அப்பெண்ணின் பெண்ணிற்கு கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது என போலீசார் உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் மகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததிலிருந்து மன அழுத்தத்தில் இருந்த தம்பதியினர், மனைவிக்கு தொற்று நேர்மறையானதை தொடர்ந்து மேலும் சோர்வடைந்த நிலையில், இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…