300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்தவர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Published by
லீனா

ஹரியானாவில் 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்த பிரவீன் குமார் என்பவர் கொரோனாவால் உயிரிழப்பு.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கூட முன்வராத நிலையில், தன்னார்வலர்களும், காவலர்களும் தாமாகவே முன்வந்து மனிதாபிமானத்தோடு அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்து வைக்கின்றனர்.

அந்த வகையில், ஹரியானா மாநிலம் ஹிசார் நகராட்சியில் கொரோனா தொற்றால்  இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வந்த நகராட்சி ஊழியர் பிரவீன் குமார் (43) அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரவீன்குமார்  நகராட்சிக்குட்பட்ட சஃபாய் கரம்ச்சாரி ஒன்றியத்தின் தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 300-க்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, ரிஷியில் உள்ள மயானத்தில் பிரவீன் குமாரை உடலுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகராட்சி ஊழியர்கள் இறுதி சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

8 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago