கொரோனா நோயாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்துடன் பேச அனுமதி.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் பலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள், செல்போன்கள் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் பேச அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், நோயாளிகள் குடும்பத்தினரை நேரில் பார்க்க முடியாமல், குடும்பத்தை விட்டு பிரிந்தது போன்ற உணர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கொரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேச அனுமதிக்கும்படி மாநில, யூனியன் பிரதேச அரசுளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசின் சுகாதாரப் பணிகள் இயக்குநர் ராஜிவ் கார்க் அவர்கள் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘குடும்பத்தினருடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசுவதால் ஏற்படும் சமூக பிணைப்பினால் நோயாளிகள் அமைதி அடைவார்கள். எனவே, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், தங்களின் ஸ்மார்ட் போன், டேப்லட் உதவியுடன் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேச அனுமதி அளியுங்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…